பாலம் வேண்டும்

Update: 2022-12-04 14:19 GMT

திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர், பட்டரவாக்கம் ரெயில் நிலையத்தில் இருந்து அருகே உள்ள தொழிற்சாலைகளுக்கு தினமும் பணி நிமித்தமாக ஆண்கள் மற்றும் பெண்கள் சென்று வருகிறார்கள். இந்த நிலையில் கால்வாயை கடந்து தான் தொழிற்சாலைக்கு சென்று வருகிறார்கள். ஆனால் அந்த கால்வாயில் இருக்கும் தண்ணீர் அசுத்தமாக இருப்பதால் இதை கடந்து செல்லும் மக்கள் நோய் தொற்றுக்கு ஆளாகி வருகிறார்கள். எனவே இந்த பகுதியில் பாலம் அமைத்து பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்