எரியாத தெருவிளக்கு

Update: 2022-12-04 14:16 GMT

திருவள்ளூர் மாவட்டம் செவ்வாபேட்டை ரோடு திருவூர் பகுதியில் இருக்கும் தெரு விளக்கு நீண்ட நாட்களாக எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் இந்த பகுதியே இருளில் முழ்கிவிடுகிறது. இங்கு வசிக்கும் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் இரவு நேரங்களில் வெளியே செல்லவே அச்சப்படுகின்றனர். வாகன விபத்துகளும் அடிக்கடி நடக்கிறது. சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறை அதிகாரிகள் தெரு விளக்கை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்