நிழற்குடை வேண்டும்

Update: 2022-11-27 14:01 GMT

திருவள்ளூர் மாவட்டம் ரெயில் நிலையம் அருகே புதிதாக அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி கட்டப்பட்டுள்ளது. இங்கு தினந்தோறும் ஏராளமான மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். ஆனால சரியான பேருந்து வசதி இல்லாததால வெளியூர்களில் இருந்து வரும் மக்கள் சிரமப்படுகின்றனர். ஆஸ்பத்திரி அருகே பஸ் நிறுத்தம் இல்லாததால் வெகு தூரம் நடக்க வேண்டி உள்ளது. மேலும் பஸ்களுக்காக காத்திருப்பவர்கள் நிழற்குடை இல்லாமல் மழை மற்றும் வெயில் காலங்களில் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். இந்த பிரச்சினைக்கு நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்