அய்யப்பந்தாங்கல் அருகே ராமச்சந்திரா ஆஸ்பத்திரி செல்லும் முக்கிய சாலையில் குப்பைகள் கொட்டப்பட்டு, அந்த இடம் குப்பை மேடாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக ஆஸ்பத்திரிக்கு செல்லும் நோயாளிகள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் என அனைவரும் மூக்கை பொத்திக்கொண்டு போகும் சூழல் உள்ளது. இந்த பிரச்சினைக்கு மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்