காத்திருக்கும் பயணிகள்

Update: 2022-11-27 12:05 GMT

காத்திருக்கும் பயணிகள்செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்திலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் பூந்தமல்லியிலிருந்து தாம்பரத்திற்கு செல்ல பகல் நேரத்தில் அரை மணி நேரத்துக்கு ஒரு பஸ்சும், சில நேரங்களில் 45 நிமிடத்திற்கு ஒரு பஸ்சும் இயக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே இரவு நேரத்தில் தாம்பரத்திலிருந்து பூந்தமல்லி செல்ல போதுமான அளவில் பஸ்கள் இயக்கப்படுவதில்லை. இதனால் இரவு பணி செல்பவர்கள் பல்வேறு சிரமங்களை அனுபவிக்கிறார்கள். போக்குவரத்து துறை இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்