செங்கல்பட்டு மாவட்டம் மேலக்கோட்டையூர் காவலர் குடியிருப்பில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களும் அதிகம் இருக்கின்றனர். ஆனால் இந்த பகுதியில் பொது நூலகம் இல்லை. எனவே இந்த பகுதியில் நூலகம் அமைக்க நூலகத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.