பழுதடைந்த பாலம்

Update: 2022-11-13 15:06 GMT

திருவள்ளூர் மாவட்டம், செவ்வாய் பேட்டை ரெயில் நிலையம் அருகே மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் சற்று தொலைவில் உள்ள நுழைவு பாலம் வழியாக ரெயில் நிலைத்தை கடந்து செல்கின்றன. ஆனால் நுழைவு பாலத்துக்கு போகும் சாலை மிகவும் பழுதடைந்து, புதர்கள் அடர்ந்து உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் இப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு வழங்க வேண்டும்.

மேலும் செய்திகள்