தரமற்ற குடிநீர் தொட்டி

Update: 2022-11-09 15:26 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் சிங்காடிவாக்கம் பகுதியில் உள்ள மதுரா மேட்டூர் கிராமத்தில் நீர்தேக்க தொட்டி ஒன்று புதிதாக கட்டப்பட்டது. ஆனால் இந்த நீர் தேக்க தொட்டியானது தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதாக ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் இதுவரை இந்த தொட்டியில் குடிநீர் ஏற்றப்படவே இல்லை. மேலும் தொட்டியில் உள்ள பாகங்கள் ஆங்காங்கே இடிந்தும் விழுகிறது. எனவே இதை சரி செய்ய சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்