குடிநீருடன் கலக்கும் கழிவுநீர்

Update: 2022-10-16 13:53 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டம் , ஊத்துக்காடு ஊராட்சியில் பெரும்பாலான குடிநீர் குழாய்கள் சுகாதாரமற்ற முறையில் உள்ளது. சில இடங்களில் சாக்கடை நீர் செல்லும் கால்வாயில், குடிநீர் குழாய்கள் அமைந்துள்ளது. மேலும் குழாய்களில் கசிவு ஏற்பட்டு, குடிநீருடன் சாக்கடை நீரும் கலந்துவிடுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு மற்றும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த பிரச்சினைக்கு சுகாதார துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்