பயணிகள் அவதி

Update: 2022-10-09 14:29 GMT

ஆவடி ரெயில் நிலையம் அருகே உள்ள பயணிகள் முன்பதிவு மையம் மற்றும் ரெயில்வே கேட் பகுதிகளில் கடைகள் மூலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் ரெயில் பயணச்சீட்டு முன்பதிவு செய்ய வரும் பயணிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். ரயில்வே கேட் அருகில் கடைகள் இருப்பதால் காலை மற்றும் மாலை நேரங்களில் பெரும் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதுகுறித்து பலமுறை ரயில்வே நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த பலனும் இல்லை. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி பயணிகளுக்கு உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்