பஸ் வசதி வேண்டும்

Update: 2022-09-25 14:38 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை பகுதியில் இருந்து பொதுமக்கள், வேலைக்கு செல்பவர்கள் என ஏராளமானோர் மறைமலைநகர் வழியாக செங்கல்பட்டு வரை சென்று வருகின்றனர். ஆனால் படப்பை பகுதியில் இருந்து செங்கல்பட்டு வரை செல்ல பஸ் வசதி இல்லாததால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகிறார்கள். படப்பையில் இருந்து செங்கல்பட்டு செல்ல வேண்டுமென்றால் தாம்பரம், வண்டலூர், கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளுக்கு சென்று அங்கிருந்து ஒரு பஸ் பிடித்து செல்ல வேண்டி உள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்