கால்வாய்க்கு மூடி இல்லை

Update: 2022-09-23 14:37 GMT

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம்,ஆரணி பஜார் வீதியில் சன்னதி தெரு முனையில் குடிநீர் தொட்டி உள்ளது.இதன் அருகே செல்லும் மழை நீர் கால்வாயின் மூடி உடைந்து உள்ளது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் குடிநீர் தொட்டியில் தண்ணீர் பிடித்து செல்ல வரும் பொதுமக்களும், இங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளும் இந்த கால்வாயில் தவறி விழுந்து படுகாயம் அடையும் சம்பவமும் நடைபெற்று வருகிறது. எனவே அப்பகுதியில் உள்ள அதிகாரிகள் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கிறேன்

மேலும் செய்திகள்