பாதாள சாக்கடைக்கு வழி பிறக்குமா

Update: 2022-09-23 14:35 GMT

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி, கோவில்பதகை திருமுல்லைவாயில் தெருவில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பே பாதாள சாக்கடை அமைத்து தர வேண்டி விண்ப்பித்து அதற்குரிய பணத்தையும் செலுத்திவிட்டோம். ஆனால் இன்னும் பாதாள சாக்கடை அமைத்து தரப்படவில்லை. பாதாள சாக்கடை இல்லாததால் கழிவுகள் தெருக்களில் தேங்கி நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்படுகிறது. இதற்கிடையே மழை நீர் கால்வாய் தோண்டி, தண்ணீர் இணைப்பு குழாய்கள் அனைத்தும் உடைந்து சின்னாபின்னம் ஆகிவிட்டது. எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து பாதாள சாக்கடை அமைக்கவும், தண்ணீர் குழாய்களை சீரமைக்கவும் வழிவகை செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்