போக்குவரத்து நெரிசல்

Update: 2022-09-13 14:59 GMT

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே தனியார் சர்க்கரை ஆலை உள்ளது. இங்கு கரும்பு அரவை தொடங்கியுள்ளதால் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த கரும்பு விவசாயிகள் வாகனங்களில் அதிக அளவு எடை கொண்ட கரும்புகளை ஏற்றி வருகின்றனர். அந்த வாகனங்கள் சாலைகளை அடைத்தபடி வருவதால் பள்ளிப்பட்டு நகரத்திற்குள் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த வாகனங்களை ஊருக்குள் பகலில் நுழைவதற்கு தடை விதித்து, இரவில் மட்டும் செல்ல அனுமதி வழங்குமாறு சம்பந்தபட்ட துறை அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்