போக்குவரத்து சிக்னல் அமைக்கப்படுமா?

Update: 2022-09-11 14:18 GMT

 திருவள்ளூர் மாவட்டம் காட்டுக்கூட்டு பகுதியில் உள்ள சாலையில் ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம், பூந்தமல்லி, திருவள்ளூர் என நான்கு சாலை பிரியும் சந்திப்பு பகுதி உள்ளது. இந்த நான்கு சாலை பிரியும் பகுதியில் போக்குவரத்து சிக்னல் மற்றும் வேகத்தடைகள் என எதுவும் இல்லாததால் அந்த வழியாக வரும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன. எனவே மேற்கண்ட இடத்தில் போக்குவரத்து சிக்னல் மற்றும் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்