பூந்தமல்லியிலிருந்து திருவொற்றியூர், பிராட்வே செல்ல போக்குவரத்து துறை மூலம் (தடம் எண் : 101, 101 x) ஆகிய பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்தநிலையில் இந்த பஸ்கள் அலுவலக நேரங்களில் மிக குறைந்த அளவிலேயே அதாவது ஒரு மணி நேரத்துக்கு ஒரு பஸ் தான் இயக்கப்படுகிறது. இதனால் வேலைக்கு செல்லும் ஆண்கள், பெண்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். நீண்ட நேர காத்திருப்புக்கு பின் பஸ் வந்தாலும் அதில் கூட்டம் அலை மோதுகிறது. மாலை நேரங்களில் ஒன்றன் பின் ஒன்றாக (101) பஸ் வருகிறது. அதில் ஆட்க்களே இல்லாமல் பஸ்சே வெறிச்சோடி இருக்கிறது. இது போன்ற சம்பவங்களால் போக்குவரத்து துறைக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் என்பது மட்டும் உண்மை. எனவே சீரான இடைவெளியில் மேற்கூறிய பஸ்சை இயக்கி பொதுமக்களின் சிரமத்தை போக்க வழி செய்ய வேண்டும்.