பழுதடைந்த போக்குவரத்து சிக்னல்

Update: 2022-09-09 13:46 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் குமணன் சாவடி பஸ் நிறுத்தம் அருகே போக்குவரத்து சிக்னல் விளக்குகள் உள்ளன. போரூர் செல்லும் பஸ்கள், மற்றும் குன்றத்தூர், பூந்தமல்ல்லி போன்ற முக்கிய பகுதிகளுக்க செல்லும் வாகனங்கள் இந்த பஸ் நிறுத்தத்தை கடந்து தான் செல்ல வேண்டும். இந்தநிலையில் மேற்கூறிய போக்குவரத்து சிக்னல் விளக்குகள் நீண்ட நாட்களாகவே பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நடந்த வண்ணம் இருக்கிறது. சாலையை கடந்து செல்லும் மக்கள் அச்சத்துடனே கடந்து செல்லு சூழல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து சிக்னல் சரி செய்யப்படுமா?

மேலும் செய்திகள்