காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு பகுதியிலுள்ள சீனிவாச நகர் செல்லும் சாலையில் மிக குறைவான அளவிலேயே மின்விளக்குகள் இருக்கின்றன. இதனால் இரவு நேரத்தில் இந்த சாலையில் செல்வதற்கு வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். மேலும் இருள் நிறைந்த இந்த சாலையை கடந்து செல்லும்போது விபத்துக்களும் ஏற்படுகின்றன. எனவே மேற்கூறிய பகுதிகளில் போதுமான அளவில் மின் விளக்குகள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.