குப்பைகள் அகற்றப்பட்டன

Update: 2022-09-07 14:09 GMT

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு சோளிங்கர் சாலையில் உள்ள காவலர் குடியிருப்பு எதிரே குப்பைகள் தேங்கியிருப்பது தொடர்பாக தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதையடுத்து பேரூராட்சி துப்புரவு தொழிலாளர்கள் தேங்கியிருந்த குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர். உடனடி நடவடிக்கை எடுத்த ஊழியர்களுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் மக்கள் பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்