வெள்ளகோவில் நகராட்சிக்கு உட்பட்ட குட்டகாடு பகுதியில் அதிகமான குடியிருப்புகள் உள்ளது. இதன் நடுவே உள்ள தனியார் இடத்தில் முள்புதர்கள் நிறைந்துள்ளது. இதனால் முட்புதரில் உள்ள பாம்புகள் வீட்டுக்குள் புகுந்துவிடுகிறது. பெண்கள், குழந்தைகள் பயத்துடன் இருக்கிறார்கள். எனவே இந்த முட்புதர்களை நகராட்சி அதிகாரிகள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.