காஞ்சீபுரம் மாவட்டம் சாலவாக்கம் மெயின் ரோடு திருமுக்கூடல் பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நீண்ட நாட்களாகவே கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் கொசுக்கள் படையெடுப்பிற்கும் வழி வகுக்கிறது. எனவே கழிவுநீர் அகற்றும் வாரியம் நடவடிக்கை எடுத்து பிரச்சினையை சீர் செய்ய வேண்டுகிறோம்.