திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பஸ் நிலையத்தில் சில வருடங்களுக்கு முன்பு பல லட்ச ரூபாய் செலவில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டது. ஆனால் இந்த சமுதாய கூடத்தால் போதிய வருமானம் இல்லை. மேலும் தற்போது கழிப்பறை கட்டுவதற்காக 5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்ட்டுள்ளது. இந்த நிதியை வேறு ஏதாவது பயனுள்ள பணிகளுக்கு ஒதுக்கலாம் என பள்ளிப்பட்டு பகுதியிலுள்ள மக்கள் கருதுகின்றனர். அரசு அதிகாரிகள் இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பார்களா?