திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அயப்பாக்கம் ஊராட்சி பகுதியில் சாலை ஓரத்தில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டியால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டி உடைந்து காணப்படுவதால் குப்பைகள் கீழே சிதறி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் உடைந்த குப்பை தொட்டியை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.