வயிற்றில் அடிக்கலாமா?

Update: 2022-08-24 14:30 GMT

காஞ்சீபுரம் பகுதியில் இருந்து பூந்தமல்லி செல்லும் சாலையில் அதிகமான நடைபாதை ஓட்டல் கடைகள் உள்ளன. இந்த கடையை நடத்துபவர்கள் பெரும்பாலும் ஏழை மக்கள் தான். தினமும் அவர்களுக்கு லாபம் கிடைக்குமா? என்றால் கிடையாது. பல சமயங்களில் நஷ்டம் தான் ஏற்படும். இந்த நிலையில் இரு சக்கர வாகனத்தில் போலீஸ் என்ற ஸ்டிக்கரை ஒட்டிக்கொண்டு சாலையோர கடைகளில் ரூபாய் - 20, 50 என பணம் பெறும் போலீஸ்காரர்களை தினமும் பார்க்க முடிகிறது. மாத சம்பளம் வாங்கும் போலீஸ்காரர்கள் வயிற்று பிழைப்புக்காக ஓட்டல் நடத்தும் ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கலாமா? இந்த நிலை மாறுமா?

மேலும் செய்திகள்