திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம், கொருக்கம் பேடு பகுதியில் கடந்த 4 மாதங்களாக பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் குடிநீர் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு கலங்களாக உள்ளது. இந்த கலங்கல் நீரை குடிக்கும் பொது மக்களுக்கு வாந்தி, பேதி போன்ற உடல் உபாதைகள் ஏற்படுகிறது. இதன் காரணமாக குடிநீரை விலை கொடுத்து குடிநீரை வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். எனவே கலங்களாக வரும் குடிநீரை மாற்றி புதிய போர்வெல் அமைத்து குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்.