நடுரோட்டில் உள்ள மின்கம்பம் அகற்றப்படுமா?

Update: 2023-01-25 15:50 GMT


செய்யாறு டவுன் திருவத்திபுரம் நகராட்சி 3-வது வார்டு பகுதியில் உள்ள பாண்டியன் தெருவில் மின் கம்பம் ஒன்று சாலையின் நடுவில் தெருவின் நடுவில் அமைந்துள்ளது. சாலையை சீரமைத்தபோதும் அதை அகற்றாமல் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வாகனங்கலில் செல்லும்போது நடுவில் இருக்கும் கம்பம் தெரியாமல் அதன் மீது மோதி விபத்துக்கள் ஏற்படுகிறது. உடனடியாக மின்கம்பத்தை மாற்றி அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அ.கணேஷ், செய்யாறு.

மேலும் செய்திகள்