மின்கம்பிகளை மாற்ற வேண்டும்

Update: 2022-10-12 12:39 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரத்தில் ஒரு தனியார் பள்ளி அருகே உள்ள மின்கம்பம் நீண்ட நாட்களாக சேதமடைந்து உரு குலைந்த நிலையில், எந்த நேரத்திலும் முறிந்து கீழே விழும் நிலையில் உள்ளது. சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்க புதிய மின்கம்பம் அதே இடத்தில் நடப்பட்டும், பல மாதங்களாக மின்கம்பிகள் மாற்றப்படாமல் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறைக்கு தகவல் தெரிவித்தும் கண்டுகொள்ளாமல் உள்ளனர். விபத்து ஏற்படும் முன் மின்வாரியத்துறை அதிகாரிகள் மின்கம்பிகளை மாற்ற வேண்டும்.

-சுரேஷ், பாணாவரம்.

மேலும் செய்திகள்