தெரு மின் விளக்குகள் எரியவில்லை

Update: 2023-02-15 17:19 GMT

ஆற்காடு ஒன்றியம் வேப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட கே. கே. நகர் பகுதியில் அரசு ஊழியர் மற்றும் ஓய்வுபெற்ற அரசு ஊழியர், வியாபாரிகள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள தெரு விளக்குகள் சரியாக எரியவில்லை. இதனால் இரவில் பெண்கள் தனியாகச் செல்ல அச்சப்படுகின்றனர். மேலும் தெருவிளக்கு எரியாததால் சமூக விரோதிகள் வீட்டுமனை குடியிருப்பு பகுதியில் இரவில் குடித்து விட்டு தகராறில் ஈடுபடுகின்றனர். எனவே இப்பகுதியில் தெரு மின் விளக்குகளை பழுது நீக்கி எரியவிட வேண்டும்.

-தருண், ஆற்காடு

மேலும் செய்திகள்