மின்கம்பம் சேதம்

Update: 2022-11-06 11:00 GMT

சோளிங்கரை அடுத்த சோமசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட கல்பட்டு கிராமத்தில் பொன்னியம்மன் கோவில் அருகே விவசாய நிலத்துக்கு பயன்படும் மின் கம்பம் சேதமடைந்துள்ளது. அந்தக் கம்பம் எந்த நேரத்திலும் கீழே விழுந்து விபத்து நடக்கலாம் என அஞ்சப்படுகிறது. மழைக்காலமாக இருப்பதால் மின்கசிவு ஏற்பட்டு ஆபத்து நடக்க வாய்ப்புள்ளது. மின்கம்பத்தை மாற்றி அமைக்க மின் வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-பார்த்தசாரதி, சோளிங்கர்.

மேலும் செய்திகள்