மின்தடையால் மக்கள் அவதி

Update: 2024-04-07 17:43 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தாலுகா காவேரிப்பாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பல கிராமங்களில் முறையாக மின்சாரம் வினியோகம் செய்யப்படவில்லை. நாள் ஒன்றுக்கு 5 முறையாவது மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. மக்கள் வெயிலில் கடும் அவதிப்படுகின்றனர். மின் வாரியத்துறையினர் சீராக மின்சார வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மு.இளங்கோவன், சமூக ஆர்வலர், ஆலப்பாக்கம்.  

மேலும் செய்திகள்