சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே உரசூர் கிராமத்தில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி குடியிருப்பு வாசிகள், சாலையை கடந்து செல்லும் வாகனஓட்டிகள் அச்சடைகின்றனர். மின்கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து காணப்படுகிறது. எனவே அதிகாரிகள் சேதமடைந்து காணப்படும் மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைத்துதர வேண்டும்.