கோவை மாநகராட்சி 66-வது வார்டு புலியகுளம் பாலசுப்பிரமணியன் நகரில் கடந்த 2 மாதங்களாக தெருவிளக்குகள் ஒளிரவில்லை. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் உரிய நடவடிக்கை இல்லை. இதனால் இரவில் அந்த பகுதியே இருள் சூழ்ந்து கிடக்கிறது. மேலும் திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து தெருவிளக்குகளை பழுது நீக்கி மீண்டும் ஒளிர வைக்க வேண்டும்.