சங்கராபுரம் அருகே பரமநத்தம் காட்டுகொட்டாய் பகுதியில் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கின்றன. இதனால் அந்த வழியாக ஏதேனும் கனரக வாகனங்கள் சென்றால் விபத்துகள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. இதையடுத்து கம்புகள் மூலம் மின்கம்பி தூக்கி நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் அப்பகுதியில் மின் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளதால் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். இதை தவிர்க்க தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.