மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு, பிரகாஷ் நகர் 4-வது பிரதான சாலையில் உள்ள மின்கம்பம் வீடுகள் அருகில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள மின்வயர்கள் வீடுகளின் மாடிகளில் உரசுவது போன்று உள்ளது. இதனால் வீடுகளில் உள்ள பொதுமக்கள் அச்சத்துடனே இருக்கின்றனர். எவ்வித அசம்பாவிதமும் ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.