புகார் எதிரொலி

Update: 2026-05-03 10:57 GMT

சென்னை மடிப்பாக்கம் கார்த்திகேயாபுரம் 4வது தெருவில் சாலையின் ஓரத்தில் உள்ள மின்கம்பம், அதன் சிமெண்ட் பெயர்ந்து மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தது. இதுதொடர்பாக 'தினத்தந்தி' புகார் பெட்டியில் படத்துடன் செய்தி வெளியானது. சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கையாக சேதடைந்த மின்கம்பத்தை சீரமைத்தனர். உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், அதற்கு தூண்டுதலாக நின்ற 'தினத்தந்தி' பத்திரிகைக்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்