சிதம்பரம் பஸ்நிலையத்தில் இருந்து அண்ணாமலைநகர் செல்லும் வழியில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்விளக்குகள் பழுதடைந்துள்ளன. இதனால் மின்விளக்குகள் எரியாமல் இருப்பதால் இரவு நேரத்தில் அப்பகுதியில் வாகன விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்கள் நடைபெறும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே பழுதடைந்த மின்விளக்குகளை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.