விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர்-ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் போதிய தெருவிளக்கு வசதி இல்லை. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. ஆதலால் அந்த வழியாக செல்பவர்கள் அதிலும் குறிப்பாக பெண்கள் அச்சப்படுகின்றனர். விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மேற்கண்ட பகுதியில் போதிய தெருவிளக்குகள் அமைக்க அதிகாரிகள் முன்வருவார்களா?