மதுரை வார்டு எண்.40 ஆவின் நகர் முதல் மெயின் ரோட்டின் திருப்பத்தில் உள்ள மின்கம்பம் முற்றிலுமாக சேதமடைந்து முறிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி குடியிருப்புவாசிகள், சாலையில் பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே கடந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து மேற்கண்ட பகுதியில் சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் அமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா?