செஞ்சி அருகே சந்தைதோப்பு முனுசாமி நயினார் தெருவில் அமைக்கப்பட்டுள்ள மின் கம்பத்தின் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து உள்ளே உள்ள இரும்புக்கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் இந்த மின்கம்பம் பலவீனமடைந்து எப்போது வேண்டுமானாலும் உடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே உயிர் சேதம் ஏதும் ஏற்படும் முன் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.