விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே மல்லாங்கிணறு அயன் ரெட்டியாபட்டி விலக்கில் அமைந்துள்ள அண்ணா நகர் கிழக்கு பகுதியில் போதிய தெருவிளக்கு வசதி இல்லை. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வெளியே சென்று வர அச்சமடைகின்றனர். இதனால் குற்ற சம்பவங்கள் நடைபெறவும் வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியில் கூடுதல் மின் விளக்கு வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுப்பார்களா?