உயிரிழப்பு ஏற்படும் அபாயம்

Update: 2025-12-14 11:30 GMT

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் ஈஸ்வரன் கோவில் ஊராட்சி கோவிந்தநாயக்கன்பட்டி கிராமத்தில் எருதுபட்டி செல்லும் சாலையில் மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பம் அமைத்து பல ஆண்டுகள் ஆனதால் முற்றிலும் சிதிலமடைந்து எலும்புக்கூடாக காட்சியளிக்கிறது. காற்றடிக்கும் நேரங்களில் பொதுமக்கள் நடமாட்டத்தின் போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மின்கம்பத்தை மாற்றியமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்