தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நாலாங்குறிச்சி புதிய வேதகோவில் தெருவில் மின்கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளதாக மாரியப்பன் என்பவர் அனுப்பிய பதிவு ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து அங்கு புதிய மின்கம்பம் அமைக்கப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும் பாராட்டும் தெரிவித்தார்.