செங்கோட்டை அருகே புதூர் பேரூராட்சி பூலாங்குடியிருப்பு, லாலாக்குடியிருப்பு கிராமங்களுக்கு செங்கோட்டை, தென்காசி நகரங்களில் இருந்து அரசு பஸ்கள் நேரடியாக இயங்கி கொண்டிருந்தன. பள்ளிவாசல் முக்கில் 2 மின்கம்பங்கள் இடையூறாக இருப்பதால் பஸ்கள் ஊருக்குள் வந்து திரும்புவதில் சிரமம் ஏற்பட்டு, தற்போது பூலாங்குடியிருப்பு ஆற்றுப்பாலம் அருகில் திரும்பி செல்கின்றன. வேறு வழியில்லாமல் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று ஊருக்கு வெளியே பூலாங்குடியிருப்பு ஆற்றுப்பாலம் அருகில் சென்று பஸ் ஏறுகின்றனர். எனவே 2 மின்கம்பங்களை மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.