புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் தாலுகா அலுவலகம் சாலை அருகே தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியின் வளாகத்தில் அமைந்துள்ள மின் கம்பத்தில் இருந்து மின்சாரம் செல்லும் மின்கம்பிகளில் செடி -கொடிகள் படர்ந்து உள்ளது. இதனால் இப்பகுதியில் மழைக்காலங்களில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட மின்சார வாரியத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து செடி- கொடிகளை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.