தொடர் மின்வெட்டு

Update: 2025-11-02 10:53 GMT

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தி.நகர் பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் குழந்தைகள், முதியவர்கள் உள்பட பொதுமக்கள் இரவு நேரங்களில் தூங்குவதற்கு மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இரவு நேரங்களில் மின்வெட்டு ஏற்படுவதை தடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்