தாடிக்கொம்பு பேரூராட்சி 2-வது வார்டு பகுதிகளான மூக்கையா கவுண்டனூர் பிரிவு, பாத்திமா நகர் பிரிவு, ஜெருசலேம் நகர், பூசாரி கவுண்டனூர் பிரிவு, ஆண்டிய கவுண்டனூர் பிரிவு ஆகிய இடங்களில் தெருவிளக்கு வசதி இல்லை. இதனால் அப்பகுதிகள் முழுவதும் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் இரவில் வீட்டை விட்டு வெளியே வரவே அச்சப்படுகின்றனர். மேலும் அப்பகுதியில் இரவில் அடிக்கடி சாலை விபத்துகள் நடக்கிறது. எனவே தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தர பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.