சாய்ந்த மின்கம்பங்கள்

Update: 2025-10-26 10:00 GMT

தேரூரில் இருந்து ஒழுகினச்சேரி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் சங்கிலி பூதத்தார் கோவிலின் கிழக்கு பகுதியில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. இதனால், மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் சரிந்து விழுந்து அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் நலன்கருதி சாய்ந்த நிலையில் காணப்படும் மின்கம்பங்களை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராம்தாஸ்,சந்தையடி.

மேலும் செய்திகள்