ஆபத்தான மின்கம்பங்கள்

Update: 2025-09-21 11:30 GMT

திருச்சி மாவட்டம் மேல கல்கண்டார்கோட்டை நேதாஜி தெருவில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கும் வகையில் சாலை ஓரத்தில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த மின்கம்பங்களில் இரண்டு மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதலமடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. பொதுமக்கள் நடமாட்டத்தின் போது இந்த மின்கம்பங்கள் முறிந்து விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சார வாரியத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்