திருச்சி மாவட்டம் பெல்ஸ் கிரவுண்டு 50-வது வார்டு ஆதிசக்தி மாரியம்மன் கோவில் அருகே மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிமெண்டு பூச்சுக்கள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் எலும்புக்கூடாக காட்சியளிக்கிறது. இந்நிலையில் காற்றடிக்கும் நேரத்தில் பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சார வாரியத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.