சேதமடைந்த மின்கம்பம்

Update: 2025-08-31 07:10 GMT

நாகர்கோவில் நெசவாளர் காலனியில் ஒரு மாவு அரவை நிலையம் உள்ளது. இதன் முன்பகுதியில் நிற்கும் ஒரு மின்கம்பத்தின் மேல் பகுதியில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெயியே தெரிந்த நிலையில் காணப்படுகிறது. அந்த பகுதி மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும். இதனால், எப்போது வேண்டுமானாலும் மின்கம்பம் முறிந்து விழுந்து அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பத்தை நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாலஸ் பெராக்கா, நெசவாளர் காலனி, நாகர்கோவில்.

மேலும் செய்திகள்